ஏர் கலப்பையுடன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ஏர் கலப்பையுடன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் கலப்பையுடன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் கலப்பையுடன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை:விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்,100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்,கூலி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மண்வெட்டி, ஏர் கலப்பையுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவசாய தொழிலாளர்களுக்கு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட நல வாரியம் கடந்த அதிமுக ஆட்சியில் கலைக்கப்பட்டதாகவும் விவசாய தொழிலாளர்களுக்கு உதவாத உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுவதாக கூறி இதனை கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story