சென்னை திருச்சி விரைவு ரயிலை மறித்தவிவசாய சங்கத்தினர் கைது

சென்னை திருச்சி விரைவு ரயிலை மறித்தவிவசாய சங்கத்தினர் கைது

ரயில் மறியல்

சீர்காழியில் ரயில் மறியலில் ஈடுபட்ட ஐக்கிய விவசாய சங்கத்தினர் கைது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், விவசாயிகள் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும், வேளாண்மை இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், வேளாண்மை கடன் முழுவதும் நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி ரயில்வே நிலையத்தில் ஐக்கிய விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி சென்னையிலிருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் மறிக்க முயன்றனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து பின்னர் உடனடியாக விடுவித்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story