தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்

தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்

பைல் படம் 

பி.எம்.கிசான் நிதி உதவி பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் குண சேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரியின் விவசாய கவுரவ ஊக்கத் தொகை, 4 மாதங்களுக்கு ஒரு முறை ₹2 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ₹6 ஆயிரம், தவணை முறையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயனாளிகள் தொடர்ந்து பயன்பெற இ-கேஒய்சி செய்திருக்க வேண்டும்.

மேலும், நில ஆவணங்கள் பதிவேற்றம்,வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும். மாவட்டத்தில் 5,795 பயனாளிகள் இ-கேஒய்சி முடிக்காமலும், 4,087 பயனாளிகள் வங்கி கணக் குடன் ஆதார் எண்ணை இணைக்காமலும் உள்ள னர். இ-கேஒய்சி மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு, தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகள் அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story