அதிமுக, பாஜக ரகசிய உறவு வைத்துக்கொள்ளது - கார்த்தி சிதம்பரம்

அதிமுக, பாஜக ரகசிய உறவு வைத்துக்கொள்ளது - கார்த்தி சிதம்பரம்

அதிமுகவும், பாஜகவும் ரகசிய உறவு வைத்துள்ளதாக கார்த்திக் சிதம்பரம் சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.


அதிமுகவும், பாஜகவும் ரகசிய உறவு வைத்துள்ளதாக கார்த்திக் சிதம்பரம் சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், மோடி தமிழகத்தில் நடத்திவரும் ரோட் ஷோ குறித்த் கேள்விக்கு அவர் பேஷன் சோ கூட நடத்தலாம் அதையும் மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் ஓட்டு போடுவது திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குதான் எனவும், பிரதமர் தமிழகம் வருவதைபோல மணிப்பூருக்கும் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம் என பேசியதுடன் 4 கோடி பணம் சிக்கியிருப்பது குறித்த கேள்விக்கு தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் பா.ஜ.க வேட்பாளரின் தொடர்புடையவர்களிடம் சிக்கிய ரூ4 கோடிக்கு இ.டியும், ஐ.டியும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் அது நடுநிலைமை அதனை பொருத்திருந்தே பார்க்க வேண்டும் என்றும் பேசினார்.

மேலும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் ஸ்டாலினை ஒரு பொய்மூட்டை என விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, அவர் எங்கே பொய் பேசினார் என்றும் அவர் கூறியபடி மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளித்து வருவதாகவும், ஆனால் அவருடன் முன்னதாக கூட்டணி வைத்திருந்த பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? என கேள்வி எழுப்பியதுடன் எடப்பாடி பழனிச்சாமி, மோடி குறித்து ஏன் விமர்சனம் செய்வதில்லை என்றும் இதிலிருந்தே இருவரும் ரகசிய உறவு வைத்திருப்பது தெரிகிறது எனவும் பேசியதுடன் என்னை பொருத்தமட்டில் அதிமுக, பா.ஜ.க இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் பேட்டியளித்தார்.

Tags

Next Story