அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் - எம்எல்ஏ பங்கேற்பு

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் - எம்எல்ஏ பங்கேற்பு

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்


சிவகங்கை அருகே பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சட்டமன்றத் தொகுதி, கல்லல் தெற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் பனங்குடியில் அதிமுக ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் எம்எல்ஏ, சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர், அமைப்பு செயலாளர் சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது பேசிய அமைப்பு செயலாளர் சீனிவாசன், அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் 80 சதவீத மருத்துவ கல்லூரி, 90 சதவீத சட்டக்கல்லூரி அமைக்கப்பட்டது. மேலும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் திறக்கப்பட்டது. பண்ணிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்துள்ளது. இதை நமது கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.

Tags

Next Story