பேருந்து நிலையத்தில் ரோபோ மூலம் வாக்கு சேகரித்த அதிமுகவினர்

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் அதிமுக வேட்பாளர் அசோகன் ரோபோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து அதிமுக சார்பில் வேட்பாளர் அசோகனை ஆதாரித்து வித்தியசமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

மேலும் தொழில்நுட்ப முறையில் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் எலக்ட்ரானிக் ரோபோ மூலம் மக்களை கவரும் வகையில் நவீன தொழில்நூட்பமான ஏ.ஐ. எனபடும் ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜி மூலம் மறைந்த முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர் , ஜெயலலிதா,கேப்டன் விஜயகாந்த் போல் பேசிய காணொளி மடிக்கணினி மூலம் ஔிபரப்பு செய்யப்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story