திருப்பூரில் அதிமுக வேட்பாளார் ஆற்றல் அசோக் குமார் பிரச்சாரம்

மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு பொதுமக்கள் நாள் குறித்துள்ளனர் கீரனூரில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசினார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கீரனூர் மற்றும் சாவடிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை தீவிரமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்விற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ் தலைமை தாங்கினார். அதிமுக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு பொதுமக்கள் நாள் குறித்து விட்டனர் என்றும், நமது அம்மா காலத்தில் செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது என்றும், மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பொதுமக்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம், பெண்கள் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மதுபான கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு மேலும் புதிய மதுபான கடைகளை திறந்து வைத்துள்ளனர். இப்போது புதிதாக குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய போதை பொருள்களை மிட்டாய்களில் கலந்து விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். அடுத்த தலைமுறைகளை கெடுக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது. திமுக அரசு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தாமல் பொதுமக்களின் அடிப்படைத் வரி உயர்வு சொத்து வரி உயர்வு உள்ளிட்ட வரிகளை அதிகப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், மறவா பாளையம் ஊராட்சி செயலாளர் பி.கே.பி சண்முகம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story