திருக்கோவிலூர் கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

திருக்கோவிலூர் கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

வாக்கு சேகரிப்பு 

திருக்கோவிலூர் கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் நடைபெற்றது.
திருக்கோவிலுார் ஒன்றிய பகுதிகளில்அ.தி.மு.க., வேட்பாளர், கூட்டணி கட்சியினருடன் நேற்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி, திருக்கோவிலுார் ஒன்றியம் வீரட்டகரம், பாலியந்தல், அரும்பாக்கம், பழங்கூர், மேலத்தாழனுார், செட்டிந்தாங்கல், வேங்கூர் உட்பட பல கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் ஓட்டு சேகரித்தார். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின்போது, வேட்பாளர் குமரகுரு பேசியதாவது; சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் விலை வாசியை கட்டுப்படுத்துவோம் என்று கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, வீட்டு வரி, பத்திர பதிவு கட்டணம் ஆகியவற்றை உயர்த்தினர். தேர்தலில் தி.மு.க., பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் கொள்ளை அடிப்பதில் குறிக்கோளாக இருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து கேட்கும் மக்களை மிரட்டி தாக்குகின்றனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. மக்களின் அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

Tags

Next Story