அன்னாசாகரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்த அதிமுக வேட்பாளர்

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகன் அன்னசகாரம் அரசு பள்ளியில் தனது வாக்கு பதிவு செய்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் 1805 வாக்கு சாவடிகளில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி,அரூர் சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது 15 லட்சத்து 24 ஆயிரத்து 896 நபர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் 1018 வாக்குப்பதிவு மையங்களில் 1805 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தர்மபுரி அதிமுக வேட்பாளர் அசோகன் அன்னசாகரம் வாக்குச்சாவடி மையத்திலும் தனது வாக்கு பதிவு செய்தார். வாக்குச்சாவடி மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story