திருப்பூரில் உடல் அடக்கம் செய்ய சென்றவர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

திருப்பூர் பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமிய பெருமக்களிடம் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

உடல் அடக்கம் செய்ய கொண்டு சென்றவர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்* திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமிய பெருமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு இன்று ஓட்டு சேகரித்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அருணாச்சலம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வருகிறார். அந்த வகையில் இன்று மதியம் திருப்பூர் பெரிய கடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தொழுகை முடித்து வரும் இஸ்லாமிய பெருமக்களிடம் அவர் ஓட்டு சேகரித்தார். அப்போது பள்ளிவாசல் வழியாக இஸ்லாமியர் ஒருவர் இறந்த உடல் கொண்டு செல்லப்பட்டது.

பிணத்தை கொண்டு சென்றவர்களிடமும் வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story