மாட்டு வண்டியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.

மாட்டு வண்டியில் வாக்கு சேகரித்த  அதிமுக வேட்பாளர்.

மாட்டு வண்டியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

திருச்சி மாவட்டம், நடராஜபுரம் பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி ,கொப்பாவளி,அன்பில் நடராஜபுரம், ஜங்கமராஜபுரம் மங்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரம்பலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் தனது ஆதரவாளர்களுடன் மாட்டு வண்டியில் தேர்தல் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய வேட்பாளர் சந்திரமோகன் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களான தாலிக்கு தங்கம், திருமணஉதவித் தொகை திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த திட்டங்கள் தொடர வேண்டுமானால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து எங்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். மேலும் இந்த பகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார் . இந்நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும, முன்னாள் எம்பியுமான ப.குமார் மாவட்ட பாசறை செயலாளர் அருண்நேரு ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், செல்வீரர்கள், வீராங்கனைகள், மகளிர் அணியினர், தகவல் தொழில்நுட்ப அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story