அதிமுக வேட்பாளர் ராணி வேட்பு மனு தாக்கல் செய்தார்

அதிமுக வேட்பாளர் ராணி வேட்பு மனு தாக்கல் செய்தார்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராணி இன்று மனு தாக்கல் செய்தார்


விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராணி இன்று மனு தாக்கல் செய்தார்

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார் இதனையடுத்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதிவியையும் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு மக்களவை தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தவும் உத்தரவு பிறப்பித்தது இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்களை செய்து வரும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராணி இன்று விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்வதற்க்காக வந்திருந்தார்.

அவருடன் மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் முன்னாள் அமைச்சர் பச்சைமால் மற்றும் குமரி பாராளுமன்ற வேட்பாளர் நசரேத் பசிலியான் உட்பட 5 பேர் வந்திருந்தனர். இதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் ராணி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story