பெண்களுக்கு சுமைகளை தந்தது திமுக ஆட்சி என அதிமுக வேட்பாளர் ராணி பேச்சு

பெண்களுக்கு சுமைகளை தந்தது திமுக ஆட்சி என அதிமுக வேட்பாளர் ராணி பேச்சு

பெண்களுக்கு சுமைகளை தந்தது திமுக ஆட்சி என அருமனையில் அதிமுக வேட்பாளர் ராணி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.


பெண்களுக்கு சுமைகளை தந்தது திமுக ஆட்சி என அருமனையில் அதிமுக வேட்பாளர் ராணி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக ராணி போட்டியிடுகிறார். அவர் மேல்புறம். கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அருமனை, உண்ணாமலைக்கடை, சிதறால் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.பின்னர் வேட்பாளர் ராணி கூறுகையில்,ஜெயலலிதா 6 எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என எண்ணினார்கள்.

அவரை போலவே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்கு நன்மைகள் செய்வதிலேயே தனது நேரத்தை செலவிட்டு, சிந்தையில் உருவான சீர்மிகு திட்டங்களை நிறைவேற்றி மக்கள் பயன்பெற வழிவகுத்தார்கள். தி.மு.க ஆட்சி மக்களுக்கு வேதனைகளை தந்த ஆட்சி. மனசாட்சி இல்லாமல் காட்சிகளை மட்டுமே தருகின்ற ஆட்சியாக தி.மு.க. ஆட்சி விளங்கி வருகிறது.

பெண்கள் பொன்நகை இல்லாமல் இருக்கலாம். ஆனால் புன்னகை இல்லாமல் இருக்கலாமா,பெண்களின் புன்னகையை பறித்த ஆட்சி தி.மு.க. ஆட்சி.. பெண்களுக்கு சுமைகளை தந்த ஆட்சி தி.மு.க. ஆட்சி. இதிலிருந்து மக்கள் விடுதலை பெற வி ள வங் கோடு சட்டமன்றத்தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெறச் செய்ய வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி விரைவில் மலரும். அதுவரை பொறுத்திருங்கள் வெற்றி நம் பக்கம் என அவர் கூறினார்.

Tags

Next Story