பழனி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

பழனி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் முகமது முபாரக், பழனி சட்டப் பேரவைத் தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ., கட்சியின் மாநிலத் தலைவா் முகமது முபாரக், பழனி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஆயக்குடி, பாலசமுத்திரம், புதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இதில் முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, மாநில எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ரவி மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். வேட்பாளரான எஸ்டிபிஐ., மாநில தலைவா் முகமது முபாரக் கூறியதாவது,

இந்த தோ்தலில் திமுகவின் உண்மையான முகத்தை சிறுபான்மையினா் வெளிப்படுத்துவாா்கள். அதிமுகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா். இதில் எஸ்டிபிஐ., கட்சியின் மாவட்டத் தலைவா் கைசா், மாவட்ட துணைத் தலைவா் முபாரக்அலி, மக்கள் தொடா்பு நிா்வாகி கனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story