பிரச்சார வாகனத்திற்கு டாட்டா:காரில் ஒய்யாரமாக சென்ற அதிமுக வேட்பாளர்

பிரச்சார வாகனத்திற்கு டாட்டா:காரில் ஒய்யாரமாக சென்ற அதிமுக வேட்பாளர்

பிரச்சாரத்திற்கு டாடா சொன்ன அதிமுக வேட்பாளர் 

செய்யூர் அருகே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பிரச்சார வாகனத்திற்கு டாட்டா சொல்லிவிட்டு அதிமுக வேட்பாளர் காரில் ஒய்யாரமாக சென்றார்.

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் பிரச்சாரம் தீவிரம் எடுக்க துவங்கியுள்ளது. மறுபுறம் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் , கல்குளம் , லத்தூர், பாலூர், தென்மாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்தார்.

உச்சி வெயிலின் அதிமுக வேட்பாளர் வாக்குகளை சேகரிக்க வருவதை ஒத்தி அப்பகுதி மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் காத்திருந்தனர். ஆனால் அதிமுக வேட்பாளரோ அதிமுக பிரச்சார வாகனத்தில் வராமல் நிர்வாகிகளை வாகனத்தில் ஏற்றிவிட்டு பின்னால் ஏசி காரில் வந்தார்.

அதிமுக வேட்பாளர் பின்னால் ஏசி காரில் உயரமாக வந்தது அதை பார்த்த பொதுமக்கள் மற்றும் சில நிர்வாகிகளுக்கு முகசூழிப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரே , பிரச்சார வாகனத்தில் ஏறாமல் வயிலுக்கு பயந்து காரில் வந்தது பொதுமக்களிடே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது .

Tags

Next Story