இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

 அதிமுக

அதிமுக வேட்பாளர் ப. கருப்பையா ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தொழுதுவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ப. கருப்பையா புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஜெமிஆ ஸிராஜூம் மூனீர் அரபிக் கல்லூரி ஈக்தா கார்டன்-னில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தொழுதுவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இஸ்லாமியர்கள் அவருக்கு தாங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்தனர். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ப. கருப்பையா அறிவிக்கப்பட்டு தற்பொழுது அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஜெமிஆ ஸிராஜூம் மூனீர் அரபிக் கல்லூரி ஈக்தா கார்டன்-னில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தொழுதுவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இஸ்லாமியர்கள் அவருக்கு தாங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகர தெற்கு பகுதி செயலாளர் எஸ். ஏ. எஸ் சேட்டு என்ற அப்துல் ரகுமான் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story