தேமுதிக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர்

தேமுதிக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளர்
தேமுதிக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய காஞ்சிபுரம் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர்
செங்கல்பட்டில் தேமுதிக கட்சி நிர்வாகிகளை சந்தித்து காஞ்சிபுரம் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆதரவு திரட்டினார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எம். ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவைத் திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து தேமுதிக கட்சியின் ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகளுக்கும் சால்வை அணிவித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டுமென கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் அதிமுக, தேமுதிக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story