நாமகிரிப்பேட்டை அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

நாமகிரிப்பேட்டை அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

மரியாதை செய்த அதிமுகவினர் 

அதிமுக நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியம், நாமகிரிப்பேட்டை பேரூர், சிராப்பள்ளி பேரூர் ஆகிய பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அதிமுக கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து இரண்டு நிமிடம் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் கே.பி.எஸ். சரவணன், தலைமையில் பேரூர் கழக செயலாளர் மணிக்கண்ணன், செந்தில் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story