எம்ஜிஆர் நினைவு தினம்: அதிமுகவினர் மரியாதை

எம்ஜிஆர் நினைவு தினம்: அதிமுகவினர் மரியாதை

எம்ஜிஆர் நினைவு தினத்திற்கு அதிமுகவினர் மரியாதை

எம்ஜிஆரின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அதிமுக சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் போது அதிமுக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட கழக அவை தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், பகுதிச் செயலாளர்கள் முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பில்லா விக்னேஷ், கே.ஜே. பிரபாகர், டேக் ராஜா, எம்ஜிஆர் இளைஞர் அணி திருச்சிற்றம்பலம், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ருமணி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லட்சுமணன், எம்பெருமாள், வக்கீல் சரவணபெருமாள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story