அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில்   தண்ணீர் பந்தல் திறப்பு
தண்ணீர் பந்தல் திறப்பு
நாமக்கல் மாவட்டம், ராசிப்புரம் அருகே அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் வெயில் வாட்டி வருகிறது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேலாக வெயில் வாடி வரும் நிலையில், ராசிபுரம் அதிமுக ஒன்றிய கழக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் வேம்பு சேகரன் அவர்கள் தலைமையில் ராசிபுரம் அடுத்த குருசாமி பாளையம், ஆண்டகளூர்கேட், பட்டணம் ஆகிய பகுதியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் பி. தங்கமணி, முன்னாள் அமைச்சர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ.சரோஜா, ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நீர் மோர், கருப்பு சாறு, தர்பூசணி, இளநீர், குளிர்பானங்கள், நுங்கு உள்ளிட்ட பல வகைகள் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்டன.

இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் இ.கே.பொன்னுசாமி, வேம்பு சேகரன், தாமோதரன், கிளை செயலாளர் பி.கணேசன், மற்றும் கருப்பசாமி, முருகேசன், ராதா சந்திரசேகரன், பிரகாஷ் தங்கம்மாள், மேலும் நிர்வாகிகள், தொண்டர்கள், வார்டு கழக செயலாளர், கிளைக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story