ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கிய அதிமுகவினர்

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கிய அதிமுகவினர்

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிமுகவினர் புத்தாடைகள் வழங்கினர்.


ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிமுகவினர் புத்தாடைகள் வழங்கினர்.
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக.வின் பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி ஈரோடு மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்எல்ஏ.வும், எம்ஜிஆர் மன்ற செயலாளருமான தென்னரசு தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் வீரக்குமார், முன்னாள் எம்எல்ஏ பாலு, முன்னாள் துணை மேயர் பழனிசாமி, பகுதி செயலாளர் மனோகரன், அவை தலைவர் மீன் ராஜா என்ற ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story