கிராமம் தோறும் இரவு நேரத்தில் ஓட்டு வேட்டையாடிய அதிமுகவினர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் கிராமம் தோறும் இரவு நேரத்தில் ஓட்டு வேட்டையாடிய அதிமுகவினர்.

கிராமம் தோறும் இரவு நேரத்தில் ஓட்டு வேட்டையாடிய அதிமுகவினர். கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தங்கவேல். நேற்று மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு, மாலை 6 மணி முதல், இரவு 10 மணி வரை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று மணல்மேடு பகுதியில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது. வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை, கிராம மக்களுக்கு எடுத்துக் கூறி இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர் தங்கவேலுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் தங்கவேல், தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என அங்கு கூடியிருந்த கிராம மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story