விருதுநகர்: மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

விருதுநகர்: மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

மொட்டை அடித்து காணிக்கை செலுத்திய அதிமுகவினர் 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழக முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்ட நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக படந்தால் தென்றல் நகரில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் D.பாஸ்கரன் முன்னிலையில் கழக நிர்வாகிகள் ஜெயலலிதா திருவுருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவை சார்ந்த பாலகிருஷ்ணன், முருகன், கணேசன்,கருப்பசாமி,முருகன், விஜய்,சேகர்,லயன் எம்ஜிஆர் ஆகியோர் முடிகாணிக்கை செலுத்தினார்கள். முடிகாணிக்கை செலுத்திய அதிமுகவிற்கு மாவட்ட கழக செயலாளர் . ரவிச்சந்திரன் புத்தாடை வழங்கி சால்வை அணிவித்து கவர் வைத்தார்.

Tags

Next Story