அண்ணா நினைவுதினம்- முன்னாள் அரசு கொறடா பங்கேற்பு

அண்ணா நினைவுதினம்- முன்னாள் அரசு கொறடா பங்கேற்பு

அண்ணா நினைவு நாள்

அரியலூரில் அதிமுகவினர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலத்தில் ஈடுப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவுதினம் கடைபிடிக்கபட்டது. இதனையொட்டி அதிமுக சார்பில் முன்னாள் அரசு கொறடா தாமரை. இராஜேந்திரன் தலைமையில் அமைதி ஊர்வலமாக வந்த அதிமுகவினர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அரியலூர் ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியன், செல்வராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story