அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு சனி சந்தை திடல் பகுதியில் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வானது பள்ளிபாளையம் நகர, ஒன்றிய, பேரூர், கழக அதிமுக சார்பில் நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் பி.எஸ்.வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். அறிஞர் அண்ணா அவர்கள் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பள்ளிபாளையம் ஒன்றிய அதிமுக செயலாளர் சேர்மன் செந்தில்,, பள்ளி பாளையம் அதிமுக நகரத் துணைச் செயலாளர் ஜெய் கணேஷ் ,அம்மா பேரவை செயலாளர் டி.கே.சுப்பிரமணி, ஆலாம்பாளையம் பேரூர் கழக செயலாளர் செல்லதுரை, மற்றும் வார்டு உறுப்பினர்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் இதில் கலந்து கொண்டனர்..

Tags

Next Story