தரமற்ற சாலைகள் - பணியை நிறுத்திய அதிமுக நிர்வாகிகள்
சாலை பணிகளை நிறுத்திய அதிமுகவினர்
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியின் 8-வது வார்டில் சாத்தான் வீதியில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணி ஒப்பந்தம் விடப்பட்டு பணி செய்வதற்கான அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பொழுது, தார் சாலையில் வைப்பதற்கான சாலைகளை கிளறி பண்படுத்தி சாலை அமைப்பதற்கான அடிப்படை பணிகள் மேற்கொள்ளாமல் ஏற்கனவே உள்ள சாலையின் மீது தார் ஊற்றி அப்படியே சாலை போடும் பணியினை மேற்கொண்டனர்.
மேலும், சாலை பணி அமைப்பதற்கான தண்ணீர் கொண்டு வராமல் அந்த தெருவில் உள்ள குடிநீர் டேங்க்கில் ஆயில் முழுவதுமுள்ள குழாய் பயன்படுத்தி நீரை எடுத்தனர். இதனால் குடிநீரை பயன் படுத்த முடியாத நிலையானது. இதனைக் கண்ட அதிமுக கருங்குழி பேரூர் கழக செயலாளர் ஜெயராஜ் மற்றும் அதிமுகவினர் சாலையை தரமான முறையில் போடுமாறு வலியுறுத்தி சாலை பணி போடுவதை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக பணி நிறுத்தப்பட்டால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.