அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

அதிமுக பொதுக் கூட்டம்

அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பங்கேற்றார்.

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மல்லூரில் நடைபெற்றது. புறநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து (வீரபாண்டி), ஜெயசங்கரன்(ஆத்தூர்), முன்னாள் எம்.எல்.ஏ. மனோன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்திரன் வரவேற்று பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் சேலம் கிழக்கு வையாபுரி, வீரபாண்டி கிழக்கு வெங்கடேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட மகளிரணி செயலாளர் லலிதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மல்லூர் பேரூர் செயலாளர் வெங்கடாசலம், பனமரத்துப்பட்டி பேரூர் செயலாளர் சின்னத்தம்பி ஆகியோர் நன்றி கூறினர்.

Tags

Next Story