திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் துண்டு பிரசுரம்

ஆத்தூரில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு புதுப்பேட்டை கடைவீதி உள்ளிட்ட பகுதியில் தமிழக எங்கும் தட்டுப்பாடு இல்லாமல் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், இளைஞர்களையும் மாணவர்களையும் குறி வைத்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டித்தும் தமிழக மக்களின் எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்காமல் தங்கள் குடும்ப நலனை மட்டுமே சிந்திக்கும் திமுக அரசை கண்டித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், ஆத்தூர் நகர செயலாளர் மோகன் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் வழங்கினார்கள்

Tags

Next Story