பட்டியலின மாணவி கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

திமுக சட்டமன்ற உறுப்பினர் குடும்பத்தினரால் பட்டியலின மாணவி கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் கண்டன உரையாற்றினார். முன்னாள் ஆவின் தலைவர் கார்த்திகேயன் அறிமுக உரையாற்றினார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி. பரமசிவம், திருச்சி மாநகராட்சி மன்ற குழு தலைவர் அம்பிகாபதி, மாமன்ற உறுப்பினர் அரவிந்த், மாநகரத் துணைச் செயலாளர் வனிதா பகுதி செயலாளர் பூபதி, சுரேஷ்குப்தா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும் பட்டிலின மாணவியை கொடுமைப்படுத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags

Next Story