விவேகானந்தபுரத்தில் போக்குவரத்து துறையை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

விவேகானந்தபுரத்தில் போக்குவரத்து துறையை கண்டித்து  அதிமுக ஆா்ப்பாட்டம்
அதிமுக ஆர்ப்பாட்டம்
விவேகானந்தபுரத்தில் அதிமுக சார்பில் போக்குவரத்து துறையை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடந்தது.

தமிழக அரசின் போக்குவரத்து கழக நிா்வாகத்தைக் கண்டித்து கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பணிமனை முன்பு அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மண்டல செயலா் எஸ். விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை குமரி கிழக்கு மாவட்டச் செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்துப் பேசினாா்.

விவேகானந்தபுரம் பணிமனையில் இருக்கும் பலவழித் தடங்களை நிறுத்தியும், அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகளையும், உறுப்பினா்களையும் பழிவாங்கும் நோக்கத்தில் ராணித்தோட்டம் பணிமனைக்கும், செட்டிக்குளம் பணிமனைக்கும் இடம் மாறுதல் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ள நாகா்கோவில் மண்டல நிா்வாகத்தைக் கண்டித்து இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது.

மேற்படி நடவடிக்கைகளை இன்னும் 7 தினங்களுக்குள் கைவிடாத பட்சத்தில் விவேகானந்தபுரம் பணிமனை முன்பு தொடா் போராட்டம் நடத்தப்படுமென என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். இதில், மாநில அதிமுக வா்த்தகா் அணி இணைச் செயலா் சி.ராஜன், மாவட்ட அவைத் தலைவா் சேவியா் மனோகரன், மற்றும் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags

Next Story