அதிமுக தெருமுனை பிரச்சாரம்

அதிமுக தெருமுனை பிரச்சாரம்
தெருமுனை பிரச்சாரம் 
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைவாசல் ஒன்றியம் லத்துவாடி, திட்டச்சேரி, கவர்பனை, கிழக்கு ராஜாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோ வன் தலைமை வகித்து பேசினார்.

கெங்கவல்லி நல்லதம்பி எம்எல்ஏ, தலைவாசல் ஒன்றியக் குழு தலைவர் ராமசாமி, தெற்கு ஒன்றிய செய லாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதிமுக மாவட்ட பிரதிநிதி குழந்தைவேல் வர வேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளர் சசிரேகா கலந்து கொண்டு, அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

இக்கூட்டத்தில் அதிமுக கிளை செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story