அதிமுக தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

கருங்குழி அருகே மேலவலம்பேட்டையில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சார்பில், கருங்குழி பேரூராட்சி, மேலவலம்பேட்டை பகுதியில் நேற்று கருங்குழி நகரகழக செயலாளர் ஜெயராஜ் ஏற்பாட்டில் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத மக்கள் விரோத தி.மு.க ஆட்சியைக் கண்டித்தும்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 4.1/2 ஆண்டுகால கழக அரசின் சாதனைகளை விளக்கியும் மாபெரும் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் V.G.குமரன், தலைமை கழக பேச்சாளர் புதூர் மணி ஆகியோர் கலந்து கொண்டு கழகத்தின் சாதனைகளையும், விடியா அரசின் அவலங்களையையும் விளக்கினர்.. இந்நிகழ்வின் போது நகர கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story