அதிமுகவினர் வீடு,வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

அதிமுகவினர் வீடு,வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அக்ரஹார சிவன் கோயில் பகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து தேர்தல் பிரச்சார நோட்டீஸ் வழங்கி வாக்கு சேகரித்தனர்.


திருச்சி மாவட்டம் லால்குடி அக்ரஹார சிவன் கோயில் பகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து தேர்தல் பிரச்சார நோட்டீஸ் வழங்கி வாக்கு சேகரித்தனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,தேமுதிக,எஸ்டிபிஐ ,புதிய தமிழகம் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு வாக்குகள் சேகரிக்க லால்குடி நகர கழகம் சார்பில் அதிமுக நிர்வாகிகள் சிறுதையூர் அக்ரஹார சிவன் கோயிலில் தொடங்கி சந்தைப்பேட்டை,லால்குடி கடைவீதி பகுதிகளில் தேர்தல் பிராச்சார நோட்டீஸை வீடு,வீடாக சென்றுபோதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தனர். இந்த வாக்கு சேகரிப்பில் லால்குடி நகர செயலாளர் பொன்னி சேகர், முன்னாள் எம்எல்ஏ எஸ். எம்.பாலன், முன்னாள் மாவட்ட அவை தலைவர் அன்பில் தர்மதுரை,சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் டோமினிக் அமல்ராஜ் ,என்.கே. சுப்பிரமணியன், லால்குடி தளபதி காத்தான், நகர கவுன்சிலர் மருதமலை, நகர அவை தலைவர் மோகன், நகர துணை செயலாளர் வக்கீல் கார்த்திகேயன், சரவண செல்வன்,நன்னிமங்கலம் சக்திவேல், பசுமை வடிவேல், மார்க்கெட் அசோக், துரை பிரதீப், பிரசன்னா மற்றும் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story