அதிமுக வெற்றி பெற தங்கத்தேர் இழுத்து வழிபாடு

காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டி தங்க தேர் இழுத்து அதிமுகவினர் வேண்டுதல் செய்யதனர்.

தமிழகத்தில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு செய்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை உடன்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஏற்பாட்டின் பேரில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டி சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் தங்க தேர் இழுத்து அதிமுகவினர் வேண்டுதல் நிறைவேற்றினர்.

முன்னதாக திருக்கோயில் இருந்து காமாட்சி அம்மன் மஞ்சள் பட்டு உடுத்தி, சந்திர பிரை கீரிடம் மற்றும் பலவண்ண மலர் மாலைகள் சூடி லட்சுமி சரஸ்வதியுடன் தங்க தேரில் எழுந்தருளினார்.அதிமுக காஞ்சி மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வடம்பிடித்து தேரினை இழுத்து திருக்கோயிலை வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பல்வேறு வகையான அன்னப்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story