சிவகாசியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்

சிவகாசியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்
சிவகாசியில் கோடைகால நீர்,மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி...
சிவகாசியில் கோடைகால நீர்,மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதிகளில், அதிமுக கட்சி சார்பில் பொது மக்களுக்கான நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், கோடை காலத்தில் பொது மக்களின் தாகம் தீர்ப்பதற்காக சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, சிவகாசி பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மேலும் விஸ்வநத்தம் சாலை,பத்திரகாளியம்மன் கோவில் அருகே உட்பட 4 இடங்களில் அதிமுக கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தல்களை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து, பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கினார்.நிகழ்ச்சியில், சிவகாசி மாநகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், அதிமுக கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story