தர்மபுரியில் ஏஐசிசிடியூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் ஏஐசிசிடியூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆர்பாட்டம்
தர்மபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஏஐசிசிடியூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தர்மபுரி மாவட்ட ஏஐசிசிடியூ சார்பில், தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் முருகன், மின்வாரிய மாவட்ட செயலாளர் சிவராமன், போக்குவரத்து கழக தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் மணிவண்ணன், நுகர் பொருள் வாணிப கழக மாவட்ட அமைப்பாளர் ராம திலகன், கட்டுமான சங்க மாவட்ட செயலா ளர் செல்வி, ஜனநாயக பொது தொழிலாளர் சங்க முனியம்மாள், கட்டு மான சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கோபி,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கராஜூ ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், தனி யார் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய ஏஐசிசிடியூ நிர்வாகிகள் மீது கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 17 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இறுதியில் மாவட்ட பொருளாளர் ஜெயமணி நன்றி கூறினார்.

Tags

Next Story