மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகள்

தூத்துக்குடி மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.‌

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கடந்த 17 18-ஆம் தேதிகளில் பெய்த மழை காரணமாக மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதி முழுவதும் மழை வெள்ளத்தால் சூழ்ந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள 3வது மைல் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாப்பிள்ளையூரனி அருகே உள்ள திரேஷ் நகர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேலும் முத்தையாபுரம் வடக்கு தெருவில் வசிக்கும் கபடி வீரர் மாசாணி முத்துவின் தாயார் ஆகியோருக்கு சசிகலா சார்பில் அவரது உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் வெண்மதி ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினர்.

Tags

Next Story