புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

புதுப்பட்டி அரசு  பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் 

புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமிற்கு கல்லூரி முதல்வர் ந. ஸ்ரீதர், முதலாம் ஆண்டு துறை தலைவர் சி. அனுராதா ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஆலோசனையின் பெயரில் அரசு மருத்துவமனை எச்ஐவி எய்ட்ஸ் ஆலோசகர் பி. கண்ணகி கலந்து கொண்டு பல்வினை நோயான எச்ஐவி எய்ட்ஸ் பரவும் விதம் அதை தடுக்கும் முறைகள் குறித்து விரிவாக விளக்கி எடுத்துரைத்தார்.

முகாம் ஏற்பாடுகளை கல்லூரியில் செஞ்சுருள் சங்கத்திட்ட அலுவலர் சி. செல்வகுமார் செய்திருந்தார்.

Tags

Next Story