வேலூர் : எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வு!

வேலூர் : எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வு!

வேலூர் மாவட்டத்தில் எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வு.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வேலூரில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலக எய்ட்ஸ் தினத்தை எய்ட்ஸ் தொற்றை குறைப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் டாக்டர். பானுமதி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து எய்ட்ஸ் நோய்க்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுகொண்டனர் . இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பானுமதி, எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால் வேலூர் மாவட்டத்தில் எச்ஐவி தொற்று குறைந்து வருவதாக கூறினார்.

Tags

Next Story