திருவிடைமருதூர் அருகே ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

திருவிடைமருதூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே அணைக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாண்டியன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுவாமிமலையில் இருந்து காரில் 9 ஐம்பொன் சிலைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஆந்திர மாநிலம் மாசிலாபட்டினம் கொடுக்குபேட்டையை சேர்ந்த சீனிவாஸ் (40) என்பவர் ஆந்திர மாநிலம் வாடப் பள்ளியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு எடுத்துச் சென்றதாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் 9 ஐம்பொன் சிலைகளையும் கைப்பற்றி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகம் கொண்டு வந்து தாசில்தார் பாக்கியராஜ் வசம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story