செண்பகவல்லியம்மன் திருக்கோவிலில் ஐப்பசி திருவிழா

செண்பகவல்லியம்மன் திருக்கோவிலில் ஐப்பசி திருவிழா

ஐப்பசி திருவிழா

செண்பகவல்லியம்மன் திருக்கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரத்துக்குப் பின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜ குரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா,ரவீந்திரன், சண்முகராஜ் நிறுத்தியலட்சுமி , கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால், உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் அடுத்த மாதம் 9ந்தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை என சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 9ம் நாளான அடுத்த மாதம் 6ந்தேதி திருத் தேரோட்டம், 8ந்தேதி தேதி அம்பாள் தவசு மண்டபத்தில் எழுந்தருளல், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐப்பசி திருக்கல்யாணம் அடுத்த மாதம் 9ந்தேதி நடைபெற உள்ளது.

Tags

Next Story