திருத்தணி முருகன் கோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்.
அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி என அழைக்கப்படும் முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவம் விழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவில் கோயிலுக்கு வருகை தந்து மூலவருக்கு நடைபெற்ற அபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டார். பின் அவருக்கு அச்சகர்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினர்.

Tags

Next Story