தென்காசியில் ஏஐடியூசி சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

தென்காசியில் ஏஐடியூசி சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

தென்காசியில் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பல கோரிக்களை நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பட்டன
தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஏஐடியூசி சங்கம் சாா்பில் தென்காசியில் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, நல வாரியத்தில் பதிவு செய்யும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும், கல்வி, திருமண உதவித்தொகையை உயா்த்த வேண்டும், ஓய்வூதியத்தை மாதம் ரூ.3 ஆயிரமாகவும், இயற்கை மரண உதவித்தொகையை ரூ. 50ஆயிரமாவும் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியூசி பொதுச்செயலா் சுப்பையா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சுப்பிரமணி, பொறுப்பாளா் முருகன், கணேசன், அந்தோணிராஜ், கிட்டப்பா, மாரியப்பன் ஆகியோா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்ட முடிவில் கோரிக்கை மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

Tags

Next Story