திருப்பூரில் ஏஐடியுசி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஏஐடியுசி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையோர வியாபாரிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஏஐடியுசி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் , சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டம் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துவிட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்திட வேண்டும் ,மாவட்டம் முழுவதும் தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வியாபாரச்சான்று மற்றும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும் , தெரு வியாபாரிகள் அனைவருக்கும் தொழிற்சங்க ஒத்துழைப்புடன் வங்கி கடன் வங்கி மூலம் கடன் வழங்கவும், திரும்ப செலுத்துவதற்கான பெரும் திட்டம் கொண்டு வந்து அனைத்து தெரு வியாபாரிகளும் பயனடையும் விதத்தில் செயல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ ஐ டி யு சி திருப்பூர் மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story