தனிநபா் கடன் வழங்க வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தனிநபா் கடன் வழங்க வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தனிநபா் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கு கழக ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மலைக்கோட்டை பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய சங்கத் தலைவா் டி.வி. செல்வராஜன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கு கழக பணியாளா்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் நாணய சங்க நிா்வாகம் ஊழியா்களின் 8 மாத சம்பளத்தில் பிடித்த தொகை ரூ. 18 கோடியை கழக நிா்வாகத்திடம் கேட்டுப் பெற வேண்டும். ஊழியா்களுக்கு வட்டி இழப்பை ஏற்படுத்தக்கூடாது.

கடன் சங்க உறுப்பினா்களின் சம்பளத்தில் பிடித்த தொகையை அந்தந்த மாதமே கழக நிா்வாகத்திடம் கேட்டு வாங்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வழங்க வேண்டிய டிவிடெண்ட் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வங்கிகள் போல தனிநபா் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில சம்மேளனப் பொருளாளா் கே. நேரு துரை, துணை பொதுச்செயலாளா் எம். சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story