அகிலனின் 102ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி

அகிலனின் 102ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி

அகிலன் பிறந்தநாள் 

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் அகிலனின் 102ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது

ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் அகிலனின் 102ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் அவர் பிறந்த ஊரான பெருங்களூரிலுள்ள அரசு பகுதிநேர நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் சரண்யா ஜெய்சங்கர் தலைமை வகித்தார்.

பெருங்களூரில் பிறந்த அகிலனின் படைப்புகள் குறித்து பலரும் பேசினர். புரவலர்களின் நன்கொடையில் அரசு மாதிரிப் பள்ளி மாணவர்கள் 200 பேர் நூலகத்தில் உறுப்பினராக்கப்பட்டனர். முன்னதாக, நூலகர் ராமசாமி வரவேற்றார். முடிவில் புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவைச் செயலர் மு. மாரிமுத்து நன்றி கூறினார்.

Tags

Next Story