குடியாத்தம் அருகே அக்ராவரம் ஏரி நிரம்பியது: மலர் தூவி எம்எல்ஏ பூஜை

குடியாத்தம் அருகே அக்ராவரம் ஏரி நிரம்பியது: மலர் தூவி எம்எல்ஏ பூஜை

பூஜையில் பங்கேற்ற எம்எல்ஏ

குடியாத்தம் அருகே அக்ராவரம் ஏரி நிரம்பியதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மலர் தூவி பூஜை செய்து வரவேற்றார்.

குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் இருந்து கடந்த 10-ந் தேதி வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் வினாடிக்கு தலா 70 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் செல்வதால் குடியாத்தம் ஒன்றியத்தில் வறண்டு கிடந்த அக்ராவரம் ஏரி நிரம்பி காலைவழிந்து ஓடியது.

அதைத்தொடர்ந்து அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூஜை செய்து, பூக்கள் தூவி தண்ணீரை வரவேற்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் என்.முனிசாமி, துணைத்தலைவர் தமிழரசி இளையராஜா,

தாட்டிமானபல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன், விவசாயிகள் சங்கத் தலைவர் கே.சாமிநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர் அமுதாசிகாமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story