அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் போலீசார் தடியடி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் போலீசார் தடியடி

தடியடி 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கேலரி பகுதிக்குள் செல்ல பார்வையாளர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி அப்பகுதியில் இருந்து கலைத்துவிட்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் பார்வையாளர்கள் அமரும் இடம் அருகே 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து வருகை தந்த பார்வையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் கேலரி பகுதியில் செல்ல முற்பட்டபோகுது போலீசார் பார்வையாளர்களை தடியடி நடத்தி அப்பகுதியில் இருந்து கலைத்துவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எப்படியாவது ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து விட வேண்டும் என முண்டியடித்துக் கொண்டு பார்வையாளர்கள் காவல்துறையினரை தாண்டி உள்ளே செல்ல முயற்சி செய்தபோது போலீசாருக்கும் பார்வையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கலைத்து விட்டனர்

Tags

Next Story