அலங்காநல்லூர் : காளை முட்டியதில் மற்றொரு காளை காயம்
மயக்கமடைந்த காளை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடியில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளையை ஏற்கனவே களத்தில் நின்ற காளை முட்டியதால் மயக்கமடைந்து விழுந்தது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தில் அவிழ்த்து விடப்பட்ட வாடிப்பட்டி மூர்த்தி என்பவர் காளையை மற்றொரு காளை முட்டியதால் காயமடைந்தது. இதில் அந்த மாடு களத்திலேயே மயங்கி அரை மணி நேரமாக படுத்து கிடந்தது . மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் சக மாடு பிடி வீரர்கள் சேர்ந்து வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் ஜல்லிக்கட்டு களத்தில் பரபரப்பு ஏற்பட்டது
Next Story