அடைக்கல அன்னை ஆலய விண்ணேற்பு பெருவிழா
தேர் பவனி
ஆலங்குடி அருகே புனித அடைக்கல அன்னை ஆலய விண்ணேற்பு விழா தேர் பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெங்கடாகுளத்தில் கிராமத்தில் அமைந்துள்ள உள்ள புனித அடைக்கல அன்னை ஆலய விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 5 தேர் ஒன்றன்பின் ஒன்றாக பொதுமக்கள் புடை சூழ பவனி வந்தது. இதில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
Next Story